'>

Tuesday, April 24, 2012

பா.ஜ.க காங்கிரஸ் கூட்டு சதி?


தம் சுய நலத்துக்காக ஜனாதிபதி ஜன நாயகத்தை கொண்டுவர பா.ஜ.க – காங்கிரஸ் கட்சிகள் கூட்டு சதி செய்ய எந்த அளவுக்கு வாய்ப்பிருக்குங்கறதை இந்த பதிவுல பார்ப்போம். ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வர்ர இந்த சமயத்துல மறுபடி அப்துல் கலாம் பேரு அடிபடுது. கலாம் எப்படியா கொத்த கிராக்கிங்கறதை ஏற்கெனவே பல தடவை எழுதியிருக்கேன். மறுபடி எழுதனும்னா எனக்கே போரட்டிக்குது. அதனால அந்த பதிவுக்கான தொடுப்பை தர்ரேன். இங்கே அழுத்தி அதையும் ஒரு பாட்டம் படிச்சுருங்க.
சுதேசி இதழ் இந்தியாவில் ஜனாதிபதி முறை ஜன நாயகத்தை கொண்டு Linkவரப்போறாய்ங்கன்னு ஒரு ஹஞ்சை வெளியிட்டிருக்கு. இதுக்கு அவிக கிட்ட இருக்கிற ஆதாரங்கள் என்னன்னு நமக்கு தெரியாது. ஆனால் இந்த ஜனாதிபதி ஜன நாயக பிரஸ்தாவனை வர்ரது இது ஒன்னும் மொதல் முறை கிடையாது.

ஜ.ஜ.நாயகம்னா என்னன்னு தெரியாதவுகளுக்கு ஒரு வரியில சொல்லிர்ரன். இப்பம் நாம எம்பிக்களை ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கறோம். அவிக ஓட்டுப்போட்டு (?) பிரதமரை தேர்ந்தெடுக்கறாய்ங்க. மெஜாரிட்டி எம்பிக்களோட ஆதரவு இருக்கிறவரை தான் பிரதமரா தொடர முடியும்.

Read More

No comments: