'>

Thursday, February 2, 2012

மிஸ்டர் விஜய்காந்த் ! டேக் கேர் ..




விஜய்காந்த் சார்!

ஒரு முன்னாள் ரஜினி ரசிகனா இந்த கருத்துக்களை தெரிவிக்கறேன். மதுரைக்கும் நமக்கும் ஸ்னான ப்ராப்தி கூட கடியாது. ஒரு காலத்துல அம்மனுக்காவ நாம எளுதின கவிதைகளை கட்டா கட்டி மீனாட்சி கோவில் நிர்வாக அலுவலருக்கு அனுப்பினம். அந்தாளு அதை எதுக்கு உபயோகிச்சாரோ என்ன ஆனாரோ நமக்கு தெரியாது. ஆனால் மீனாட்சி நமக்கு மதுரை தமிழை கொடுத்து " நிக்க" வச்சுட்டா. அந்த விசுவாசத்துல இந்த கருத்துக்களை தெரிவிக்கிறேன். எடுத்தா எடுங்க உட்டா உடுங்க. எடுத்தா உங்களுக்கு மட்டுமே இல்லை தமிழ் நாட்டுக்கே லாபம். உட்டா உங்களுக்குத்தேன் நஷ்டம்.

சட்ட சபையிலருந்து சஸ்பெண்ட் ஆன பிற்காடு பத்திரிக்கையாளர் கூட்டத்துல பேசினதை சன் நியூஸ் புண்ணியத்துல லைவா பார்த்தேன். ரஜினி மாதிரி வருவேன் ஆனா வரமாட்டேன்னு காமெடி பண்ணாம அட்வென்சர் பண்ணி சொந்த லைஃபை ட்ராஜடி பண்ணிக்கிட்ட உங்களுக்கு முதற்கண் பாராட்டுக்கள்.

கடந்த சட்டமன்ற தேர்தல்கள்ள கூட்டு வச்சிங்க-பொறியல் வச்சிங்கன்னு விமர்சிக்கமாட்டேன். மொதல் 6 மாசம் கியா.. விமர்சிக்கமாட்டேன் கியான்னு காமெடில்லாம் பண்ணிங்க


ஜெ தில்லி போனப்ப அங்கன தலைவர்கள், முன்னாள் கவர்னரு சென்னாரெட்டி அ நாகரீகமா நடந்துக்கிட்டாய்ங்களாம். ராமதாசு செல்ஃபோன்ல "நாயே"ன்னாராம். தா.பாவை பி.எம் ஆஃபீஸ்ல முடக்கிவச்சுருந்தாய்ங்களாம். ஒய்யாரக்கொண்டையாம் தாழம்பூவாம். உள்ளுக்குள்ள ஈறும் பேனுமாம் கதைதேன் இதெல்லாம். நீங்களும் எதுல குறைச்சல் மச்சான்,சம்சாரம் / வேட்பாளரை தட்டறது /பிரச்சாரத்துல உளர்ரது.

தில்லியில ஆஃபீஸ் திறந்திங்க. நான் உறை அனுப்பினேன் (அந்த உறை இல்லே - தபால் உறை) நோ அட் ரசீ ஃபவுண்டுன்னு திரும்பி வந்துருச்சு. இது பழைய கதை. உங்க எம்.எல்.ஏங்களுக்கெல்லாம் மெயில் ஐடி கொடுத்திங்க .நானும் அல்லாருக்கும் மாங்கு மாங்குன்னு பேரை மாத்தி மெயில் அனுப்புனேன். ஆனால் ஒரு புண்ணியவான் கூட பதில் தரல்லை.

இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா சண்டைக்கு கூப்டுர்ரது பெருசுல்ல. கோதாவுல நிக்கனும். மூஞ்சி பல்லு உதிர்ந்து போனாலும் வெற்றி வேல் வீரவேல்னு கூவிக்கிட்டே மோதனும்.

அந்த காலத்துல பாடி பார்ட்டுக்கெல்லாம் கவசம் இருக்கும். அதனால யுத்தத்துல "சந்து" பார்த்து அடிப்பாய்ங்க. அப்படிப்பட்ட சந்துக எங்கன இருக்கோ பார்த்து அடைக்கப்பாருங்க. வேலை வெட்டி இல்லாத வடிவேலுவுக்கு வேலை போட்டு கொடுத்துட்டிங்களோன்னு ஒரு சந்தேகம்.

நீங்க மட்டும் மச்சான்,சம்சாரம் ரெண்டு பேத்தையும் கட்சியிலருந்து நீக்கிருங்க. சசி மேட்டர்ல தாளிக்கலாம். இன்னொரு முக்கியமான மேட்டர விட்டுட்டன்.

கட்சியில ஆரு பேர்லல்லாம் வாரண்ட் பெண்டிங்ல இருக்கோ அவிகளையெல்லாம் கோர்ட் சரண்டர் பண்ண சொல்லுங்க.

ஆரெல்லாம் சமீபத்துல நிலம் ,நீச்சுன்னு வாங்கினாய்ங்களோ அவிகள சாக்கிரதையா இருக்க சொல்லுங்க. வித்தவன் போயி மிரட்டினாய்ங்கன்னு கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டா நாறிரும்.

தே.மு.தி.க கட்சி அலுவலகம்லாம் பட்டா நிலத்துல தான் இருக்கா/லீஸுன்னா லீஸ் எக்ஸ்டென்ட் ஆயிட்டிருக்கான்னு செக் பண்ணிருங்க.

கக்கா போனா கக்கூஸுல ஒயுங்கா தண்ணி ஊத்துங்க. இல்லின்னா அதுக்கு கூட ஒரு கேஸு வந்தா வந்துரும். (ச்சொம்மா தமாஸு)

இப்பம் சீரியஸ் :

ஆட்டம் ஆரம்பிச்சிருச்சு - பால் விலை, பஸ் கட்டண மேட்டர்ல கோட்டை விட்டுட்டிங்க. கு.ப மின்சார கட்டண உயர்வு மேட்டர்ல வேட்டி வரிஞ்சு கட்டி ஆல்ட்டர்னேட்டிவ் ப்ரப்போசல்ஸ் கொடுங்க. ( சோடாபுட்டி பார்ட்டிங்களை பக்கத்துல போட்டு வை தலை )

முல்லை பெரியாறுலருந்து நர்ஸுங்க பிரச்சினை வரை எல்லாத்துக்கும் வலிய போய் ஆதரவு கொடுங்க. உங்க எம்.எல்.ஏக்களை தொகுதிக்குள்ர சுத்தி சுத்தி வரச்சொல்லுங்க. தொகுதி பிரச்சினைகளை முதல்வர் தனிப்பிரிவுக்கு தலையணை சைஸ்ல அனுப்பிக்கிட்டே இருக்கச்சொல்லுங்க

கட்சியை கிராமங்கள்ளருந்து வளர்த்தெடுக்க கோதாவுல இறங்குங்க. தமிழ் நாட்டு பிரச்சினைகளை பத்தி ஓடி ஓடி மனுக்கொடுங்க -வாரா வாரம் ப்ரஸ் மீட் வச்சு இந்த ரேஞ்சுல இல்லாம விவரம் சொல்லுங்க

இதெல்லாம் டிஃபென்ஸ். அப்பாறம் கோல் போட பார்க்கனும். இருக்கவே இருக்கு சசி மேட்டர் - ப்ரைவேட் ரெய்டு - கண்டெயினர்ல கரன்சின்னு கச்சாமுச்சான்னு இருக்கு.

மந்திரி மாற்றத்துக்கெல்லாம் எதுனா லிமிட்டேஷன் இருக்கா? (அரசியல் சாசனத்துல - ஐ.ஏ.எஸ்/ஐபிஎஸ் மேன்யுவல்ல) ன்னு பாருங்க. ஹை கோர்ட்டுல நாலு மனுவை தட்டிவிடுங்க.அதான் இப்பம் ஃபேஷன்.

மொதல் மொதலா அதிகாரத்தை ருசிக்க கிடைச்ச சந்தர்ப்பத்தை கோட்டை விடறிங்களேன்னு கட்சி ஆளுங்களுக்கு ( ஐ மீன் தலைவர்களுக்கு) இருக்கும். ஆறு மாசத்துல மந்திரி சபைய கவுக்கறம் -அடுத்த வருசம் நம்முதுதான் ஆட்சின்னு கொம்பு சீவுங்க.

பாவம்.. கட்சிக்காரவுக இப்பமே கட்சிக்கு செலவு பண்ணி நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பாய்ங்க. பிரபாகரன் சொன்னாப்ல கட்சிக்கு நிதி திரட்டி -கிராமப்புற தொழில்களை மேம்படுத்தி உங்க சரிஸ்மாவ உபயோகிச்சு நேஷ்னல் லெவல்ல மார்க்கெட்டிங் பண்ணி கட்சிக்கு நாலு காசு வராப்ல செய்துக்கங்க.

போராட்டம் - பொதுக்கூட்டம்னு பச்சா வைக்காம - சூட்சுமத்துல மோட்சத்துக்கு மார்கம் தேடுங்க. இதை எல்லாம் உங்களுக்கு போட்டு கொடுக்க ஒரு காரணம் இருக்கு.

தாத்தா ..சொல்லவே தேவையில்லை. வை.கோ சூட்டபிள் பர்சன்.ஆனால் அரசியலுக்கு வேலைக்காக மாட்டாரு. கம்யூனிஸ்டுங்க..ஹூம்..

தமிழ் நாட்டுக்கு ஒரு விடியலை கொண்டு வர உங்களுக்குத்தான் அதிக வாய்ப்பிருக்கு. இல்லாத ஊருக்கு இலுப்பை பூ சர்க்கரைன்னு கதை போயிக்கிட்டிருக்கு. கொஞ்சம் மாத்தி ரோசிச்சு சிக்ஸர் அடிங்க பாஸு..

உண்மையிலயே மாத்தி ரோசிக்கிற கப்பாசிட்டி உங்களுக்கு இருந்தா அடுத்த வார பேப்பர்ல வடிவேலுவும் நீங்களும் கட்டிப்புடிச்சு சிரிச்சுக்கிட்டிருக்கிற ஃபோட்டோ வரனும். வருமா?

போனஸ்:

1. நாலு எருது ஒரு சிங்கம் கதை தெரியும்ல - மொதல்ல போயி எதிர்கட்சி தலீவருங்களை எல்லாம் பாருங்க. காமன் மினிமம் ப்ரோக்ராம் ஒன்னை போட்டுக்கிட்டு வேலை செய்ற மாதிரி இனிஷியேட் பண்ணுங்க - அதிமுகவை தனிமை படுத்தப்பாருங்க (ச்சொம்மா அப்டி ஒரு சீன் கிரியேட் ஆனா கூட போதும்.

2.சங்கரன் கோவில் தானே இப்பம் ஹாட் டாப்பிக்.பொதுவேட்பாளருக்கு ட்ரை பண்ணி ஆஃப் அடிக்காம ஆப்படிக்க பாருங்க

3.அரசியல் வரலாறு தெரிஞ்ச விஸ்வாசமான பார்ட்டிய கூடவே போட்டுக்கங்க. (வருசம் சொல்றதுல கூட வா தருமார்ரது)

No comments: